வீட்டில் நிகழ்ந்த இறப்பினை பதிவு செய்தல்
- மரணம் நிகழ்ந்த 05 நாட்களுக்குள்கிராம உத்தியோகத்தருக்கு தெரிவித்தல் வேண்டும்.
- ஒவ்வொரு மரணத்தையும் பொறுத்தமட்டில், படிவம் B24 இன் பிரகாரம் தயாரிக்கப்பட்ட அறிக்கையொன்று கிராம உத்தியோகத்தரினால் இறப்பு நிகழ்ந்த இடத்தின் பிறப்பு மற்றும் இறப்பு பதிவாளருக்கு அனுப்பப்படுதல் வேண்டும்.
- இறப்பு பதிவு செய்யப்படுவது இறப்பு நிகழ்ந்த இடத்திற்கான பிறப்பு மற்றும் இறப்பு பதிவாளரினால் ஆகும்.
- இறப்பு பதிவு படிவம் CR02 பதிவாளரிடம் இருந்து பெற்றுக் கொள்ளலாம்..
- மரணத்தை அறிவிப்பதற்குத் தகுதியுள்ள நபர்கள்;
- மரணம் நிகழும் போது அருகிலிருந்த நெருங்கிய உறவினர்
- இறுதியாக நோயுற்றிருந்த போது பணிவிடை செய்த நெருங்கிய உறவினர்
- அவ்வாறான உறவினர் இல்லாத நிலையில்,
- இறந்தவர் வசித்த பதிவாளர் பிரிவில் வசிக்கும் இறந்தவரின் உறவினர்
- அவ்வாறான உறவினர் இல்லாத நிலையில்,
- இறக்கும் போது அருகிலிருந்த ஒருவர்
- மரணம் நிகழ்ந்த கட்டிடத்தில் வசிப்பவர்
- மேற்குறித்த நபர்கள் இல்லாத சந்தர்ப்பத்தில்,
- இறந்த உடலை புதைப்பவர், தகனம் செய்பவர் அல்லது வேறு வகையில் அது தொடர்பான இறுதிக் கிரியைகளை மேற்கொள்ளும் நபர்.
- இறப்பு நிகழ்ந்த 03 மாதங்களுக்குள் மரணத்தை இலவசமாகப் பதிவு செய்து கொள்ளலாம்.
- இறப்பு நிகழ்ந்து 03 மாதங்களுக்குப் பின்னரும் இறப்பைப் பதிவு செய்து கொள்ள முடியும், அதற்கு தாமதமான இறப்பு பதிவு செய்தல் விபரங்களைப் பார்வையிடவும்.
- அறிவிப்பாளருக்கு இலவசமாக இறப்புச் சான்றிதழ் வழங்கப்படும்.
** நீங்கள் குறித்த இறப்புச் சான்றிதழைப் பெற்றவுடன், அதைவாசித்து பரீட்சித்ததன் பின்னர் எடுத்துச் செல்லுமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றீர்கள்.
(1951 ஆம் ஆண்டின் 17ம் இலக்க பிறப்பு மற்றும் இறப்பு பதிவு செய்தல் கட்டளைச் சட்டத்தின் ஏற்பாடுகள் பொருந்தும்.)
வைத்தியசாலையில் (அரசு அல்லது தனியார்) நிகழ்ந்த இறப்புகளை பதிவு. செய்தல்
- மரணம் நிகழ்ந்தது ஒரு வைத்தியசாலையில் என்றால், அந்த வைத்தியசாலைக்கரிய பிறப்பு மற்றும் இறப்பு பதிவாளருக்கு மரணத்தை பதிவு செய்வதற்கு அறிவித்தல் வேண்டும்.
- இறப்பை அறிவிப்பதற்கு தேவையான பிரகடன படிவத்தை (பதிவு செய்தல் CR02 படிவம்) பிறப்பு மற்றும் இறப்பு பதிவாளரிடமிருந்து பெற்றுக் கொள்ளல் வேண்டும்.
- இறப்பைப் பதிவுசெய்வதற்காகத் அறிவித்தல் வழங்குவதற்குத் தகுதியான நபர்கள்,
- இறந்தவரின் உறவினர்
- இறக்கும் போது அருகில் இருந்த நபர்
- வைத்தியசாலைக்கு பொறுப்பான வைத்திய அதிகாரி
- சமர்ப்பிக்க வேண்டிய ஆவணங்கள்,
- முறையாகப் பூர்த்தி செய்யப்பட்ட பதிவு செய்தல் படிவம் CR02
- மரணம் நிகழ்ந்ததை உறுதிப்படுத்துவதற்கு வைத்தியசாலையினால் வழங்கப்பட்ட அறிக்கை
- 03 மாத காலத்திற்குள் ஒரு மரணத்தை இலவசமாகப் பதிவு செய்து கொள்ளலாம்.
** நீங்கள் குறித்த இறப்புச் சான்றிதழைப் பெற்றவுடன், அதைவாசித்து பரீட்சித்ததன் பின்னர் எடுத்துச் செல்லுமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றீர்கள்.
(1951 ஆம் ஆண்டின் 17ம் இலக்க பிறப்பு மற்றும் இறப்பு பதிவு செய்தல் கட்டளைச் சட்டத்தின் ஏற்பாடுகள் பொருந்தும்.)
விண்ணப்பதாரர் இறப்புச் சான்றிதழை தோட்ட அதிகாரியின் அலுவலகத்திலிருந்து இலவசமாகப் பெற்றுக் கொள்ளலாம்.பதிவுசெய்யப்பட்ட தோட்டத்தில் நிகழும் மரணத்தைப் பதிவு செய்தல்
வெளிநாட்டில் ஏற்பட்ட இலங்கையர் ஒருவரின் மரணத்தை வெளிநாட்டில் பதிவு செய்தல்
ஆகியன சமர்ப்பிக்கப்படல் வேண்டும். பதிவு செய்யப்படாத இறப்புக்களை பதிவு செய்தல்வெளிநாட்டில் மரணித்த ஒருவரின் மரணத்தை இந்நாட்டில் பதிவு செய்தல்
காலம் கடந்த இறப்புக்களை பதிவு செய்தல்
சிலர் காணாமல் போனதை மரணமாக நிரூபிப்பதற்கான ஆதாரங்கள் இல்லாத காரணத்தினால் அல்லது குறித்த நபர்களுக்கு இறப்புச் சான்றிதழைப் பதிவு செய்வதற்கு உறவினர்கள் விரும்பாத காரணத்தினால், குறித்த காணாமல் போனவர்கள் தொடர்பாக பதிவு செய்யப்பட்ட எந்தவித சட்டபூர்வமான ஆவணங்களும் இல்லாத காரணத்தினால் காணாமல் போனவர்களின் உறவினர்கள் பல்வேறு பிரச்சினைகளை எதிர்நோக்க வேண்டியுள்ளது. அத்தகைய நபர்களுக்கு இறப்புச் சான்றிதழோ அல்லது கண்டு கொள்ள முடியாமைக்கான சான்றிதழோ வழங்குவதற்கு பின்வரும் சட்டங்களின் மூலம் ஏற்பாடுகள் வழங்கப்பட்டுள்ளன. வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் ஏற்பட்ட மோதல்களின் போது அல்லது மோதல்களின் பின்னர் அல்லது அரசியல் அமைதியின்மை அல்லது சிவில் கலவரங்கள் அல்லது வலுக்கட்டாயமாக காணாமல் ஆக்கப்பட்ட நடவடிக்கைகளின் விளைவாக காணாமல் போயுள்ளதாக அறிக்கையிடப்பட்ட நபர்கள் அல்லது யுத்த நடவடிக்கையின் போது காணாமல் போனவர்கள் என அடையாளம் காணப்பட்ட ஆயுதப்படை அல்லது பொலிஸ் உத்தியோகத்தர்கள் போன்ற காணாமல் போனவர்கள் மற்றும் இயற்கை அனர்த்தங்கள் அல்லது பேரழிவுகள் காரணமாக காணாமல் போனவர்கள் போன்றவர்களின் இறப்பு பதிவுகள் மற்றும் விசாரணை ஆணைக்குழுக்கள் அல்லது விசேட ஜனாதிபதி ஆணைக்குழுக்கள் அல்லது காணாமல் போனவர்கள் தொடர்பான அலுவலகத்தினால் வெளிப்படுத்தும் தகவல்களின் அடிப்படையில் கோரிக்கைகளை முன்வைக்கலாம். கண்டு கொள்ள முடியாமைக்கான சான்றிதழுக்காக விண்ணப்பிக்க முடியுமாயிருப்து காணாமற்போன நபரின் உறவினர்களால் ஆகும். குறிப்பு ; சட்டத்தின் பிரிவு 14 இல் வரையறுக்கப்பட்டுள்ள "உறவினர்" என்பது, விண்ணப்பிக்க வேண்டிய முறை காணாமல் போய் ஒரு வருடத்திற்கு மேல் கடந்துள்ள நபர்களுக்கு, "கண்டு கொள்ள முடியாமைக்கான சான்றிதழ்" (COA) அல்லது இறப்புச் சான்றிதழின் (COD) பதிவுக்கான கோரிக்கையை முன்வைக்க வேண்டியது, காணாமல் போன நபர் கடைசியாக வசித்த அல்லது அவரின் நிரந்தர வசிப்பிடம் அமைந்துள்ள பிரதேசத்தின் மாவட்டப் பதிவாளரிடம் ஆகும். விண்ணப்பத்துடன் இணைக்க வேண்டிய இதர ஆவணங்கள் (சட்டத்தின் பிரிவு 8 ஆ) சான்றுப்படுத்தப்பட்டபிரதிகளை மற்றும்மொழிபெயர்க்கப்பட்டபிரதிகளைப் பெற்றுக் கொள்ளல்
*அத்தோடு https://online.ebmd.rgd.gov.lk இற்கு பிரவேசிப்பதன் மூலம் Onlineமுறையின் மூலம் சான்றிதழ்களின் பிரதிகளைக் கோரவும் முடியும்.இறப்புச் சான்றிதழில் உள்ளிடப்பட்ட விபரங்களைத் திருத்துதல்
காணாமற்போனவர்களின் இறப்பினை பதிவு செய்தல் / கண்டு கொள்ள முடியாமைக்கான சான்றிதழ் வழங்கல்
இறப்பு சான்றிதழ்களின் பிரதிகளைப் பெற்றுக் கொள்ளல்
இறப்புச் சான்றிதழ்களின் மொழிபெயர்க்கப்பட்ட பிரதிகளைப் பெற்றுக் கொள்ளல்