இ - சனத்தொகை

பிறப்பு, விவாகம், இறப்பு என்பவற்றைப் பதிவுசெய்வது பதிவாளர் நாயகத்தின் திணைக்களத்தின் பொறுப்பாகும். பதிவேடுகளில் பேணப்படுகின்ற பதிவுகள் எழுத்துறுமுறையில் பேணப்படுவதனால் ஏனைய அரச முகவர் நிலையங்களுக்கு அவறறைப் பெற முடியாது.அதன் விளைவாக பிரதிபண்ணுவதற்கு நேரமும் பணமும் செலவாகின்றது. ஒரே விதமான தனிப்பட்ட அடையாள எண்களை (PஐN) வழங்குதல், ஒவ்வொரு இலங்கைப் பிரசைபற்றிய தகவல்களைத் திரட்டுதல், நம்பகமான வினைத்திறன்மிக்க வாழ்க்கை நிகழ்வுகளைப் பதிவுசெய்யும் முறைமையை உருவாக்குதல், சனத்தொகை பதிவைப் பயன்படுத்தி அரச நிறுவனங்களுடன் தகவல்களைப் பகிர்ந்துகொள்ளும் நிலை அதிகரித்தல், வாழ்க்கை நிகழ்வுகளைப் பதிவுசெய்தல என்பவை உட்பட சுகாதார புள்ளிவிபரங்கள் மற்றும் பிறப்பு நோய்நிலை பற்றிய பகுப்பாய்வு என்பவற்றை வழங்குதல் இதன் நோக்கமாகும். ந - சனத்தொகை முறைமை இந்த நோக்கங்களை நிறைவேற்றுகின்ற அதேநேரத்தில், பெற்றோர்கள் உறுதிப்படுத்துகின்ற தரவுகளின் சரியான தன்மையை உறுதிப்படுத்துகிறது. அத்துடன் ஏதேனும் பிரதேச செயலகத்தின் சான்றிதழ்களை தேடுதல் மற்றும் வழங்குதல், மொழிபெயர்ப்பு தேவைகளைக் குறைத்துக்கொள்ளுதல், வெளிநாடுகளில் கூட பயன்படுத்தக்கூடியதாக இருத்தல், பிரசைகளின் நடப்பு தகவல்களைப் பராமரித்தல் மற்றும் நிறுவனங்களுக்கிடையில் பிரசைகள் பற்றிய தகவல்களைப் பகிர்ந்துகொள்ளுதல். ஆகிய பயன்களை உறுதிப்படுத்துகின்றது.

இ - காணி

மூலதனத்தை உற்பத்திசெய்கின்ற ஒரு கருவியாகப் பயன்படுத்துவதற்கு காணி சொந்தம் சம்பந்தப்பட்ட பிரச்சினைகள் நீண்டகால தடைகளாக இருக்கின்றன. நீண்ட தேடுதலில் உள்ள கஷ;டமும் காணி பதிவு அலுவலகங்களில் வேலைசெய்வதற்குப் போதியளவு இடவசதியில்லாமையும் இந்த நிகழ்ச்சித்திட்டத்திற்கு ஒரு தடையாக இருக்கின்றது. மேற்குறிப்பிட்ட பிரச்சினைக்கு ந- காணி பதிவு அலுவலகம் ஒரு தீர்வை வழங்கியதன் விளைவாக காணி பதிவு அலுவலகங்களை இலகுவாக அணுகுதல், பதிவு தகவல்கள் மற்றும் பரம்பரை தகவல்கள் என்பவற்றை விருத்திசெய்யும் வசதிகளை ஏற்படுத்துதல் போன்ற விடயங்களுக்காக ஆவணங்களைப் பாதுகாத்தல், விரைவான, செலவு குறைந்த, அதிக வசதியான சேவைகளை பொதுமக்களுக்கும் அரச நிறுவனங்களுக்கும் வழங்குதல், காணி பதிவு தகவல்களை மேம்படுத்துவதன் ஊடாக இலங்கையின் வியாபார குறிகாட்டியை உயர்த்துதல் என்பவை இந்நிகழ்ச்சித்திட்டத்தின் நோக்கமாகும்.

இ - பிறப்பு விவாகம் இறப்பு

பொதுமக்களுக்கு பிறப்பு, விவாகம், மரண பதிவுகளின் சான்றுப்படுத்தப்பட்ட பிரதிகளை வழங்குதல் பதிவாளர் நாயகத்தின் திணைக்களத்தின் பிரதான செயற்பாடாகும். பொதுமக்கள் விண்ணப்பிக்கும்போது இச் சான்றிதழ்கள் வழங்கப்படுகின்றன. சரியான இலக்கம், திகதி, சம்பவம் நிகழ்ந்த காலம் போன்ற கட்டாய விபரங்கள் விண்ணப்பதாரருக்கு தெரியாதபோது எழுத்துறுமுறையில் தேடுவது மிகவும் கஷ;டமாகும். இத்தகைய கால விரயத்தை ஏற்படுத்துகின்ற தேடும் வேலைகளைத் தவிர்ப்பதற்காக ந- பிறப்பு விவாகம் இறப்பு கருத்திட்டம் அறிமுக்கப்படுத்தப்பட்டுள்ளது. இந்த நிகழ்ச்சித்திட்டத்தின் பிரதான நோக்கம், தரவுதலத்தைப் பேணுதல், முறைமையின் ஊடாக சான்றிதழ்களை வழங்குதல் மற்றும் பிறப்பு, விவாகம், இறப்பு ஆகியவற்றின் பதிவுசெய்யப்பட்ட தகவல்களை ஏனைய அரச முகவர் நிலையங்களுடன் பகிர்ந்துகொள்ளுதல் என்பவையாகும். இவற்றைவிட விருத்திசெய்யப்பட்ட தரவுதலம், விரைவான தேடலை நடத்துதல், சான்றுப்படுத்தப்பட்ட பிரதிகளை விரைவாக வழங்குதல் மற்றும் பிரதேச மட்டத்தில் உள்ள அலுவலகங்களுக்கு தரவுத்தலங்களைப் புகுத்துவதன் மூலம் சான்றிதழ்களை விநியோகிக்கும் பணிகளைப் பன்முகப்படுத்துதல் போன்ற நன்மைகளும் கிட்டுகின்றது.

இ - உரித்து

பிம் சவிய

காணி சொந்தம் சம்பந்தப்பட்ட பிரச்சினைகள் காணி பதிவேடுகளை அணுகுவதில் உள்ள சிரமம் காரணமாக காணி பயன்பாட்டில் நீண்டகால தடைகளாக இருக்கின்றன. காணி சொந்தம் அல்லது எல்லைகள் என்பவற்றின் மூலம் எழுகின்ற அநாவசியமான பிணக்குகளைத் தவிர்ப்பதற்காக காணிப் பயன்பாட்டை மேம்படுத்துவதற்கும் விருத்திசெய்வதற்கும் வலுவான மற்றும் தெளிவான காணி உரித்தை வழங்குவதற்காக இலங்கைக்கு உரித்து பதிவு அறிமுகப்படுத்தப்பட்டது. அரசாங்கம் உறுதிப்படுத்திய உரித்து சான்றிதழை வழங்குவதற்கும் சிறந்த காணி முகாமைத்துவத்திற்கும் கணனியை அடிப்படையாகக்கொண்ட காணி தகவல் முறைமை உதவுகின்றது. அதன்படி பொதுமக்களுக்கு இலகுவான விரைவான வினைத்திறன்மிக்க பரிமாற்றல் முறையை முன்வைக்க முடியும்.

முகவரி

தலைமை பதிவாளர் திணைக்களம்

234/A3,
டென்சில் கொப்பேகடுவ மாவத்தை,
பத்தரமுல்ல,
இலங்கை.

தொடர்புகளுக்கு
+94 112 889 488 - 489

மின்னஞ்சல்
info@rgd.gov.lk